உள்ளூர்

எல்லா- பேருந்து விபத்தின் எதிரொலி வாகன உதிரி பாகங்களின் விலையை குறைப்பதற்கு திட்டம்

எல்லாவில் பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வாகன உதிரி பாகங்களின் விலையை குறைக்கும் முன்மொழிவு ஒன்றை அரசு பரிசீலித்து வருகின்றது.

இதற்கான விவாதம் நாளை நடைபெறவுள்ள வீதிப் பாதுகாப்பு தொடர்பான விவாதத்தில் நடைபெறவுள்ளது

சரியாக இயங்காத பிரேக் காரணமாக நிகழ்ந்ததாகக் கருதப்படும் இந்த விபத்து, வாகன உரிமையாளர்களுக்கு வீதிப் பாதுகாப்பு எளிதாகவும் குறைந்த செலவிலும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சு ஆராய வழிவகுத்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேனாவின் பொதுச் செயலாளர் டாமியன் வீரக்கொடி, அரசாங்கம் இந்த முன்மொழிவை ஆய்வு செய்து வருவதை உறுதிப்படுத்தினார்.

இந்த முன்மொழிவின் நோக்கம், குறிப்பாக பேருந்துகள் மற்றும் பாடசாலை வேன்கள் போன்றவற்றில் உரிய பராமரிப்பு தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதாகும்.

உதிரி பாகங்களின் விலை குறைக்கப்பட்டால், வாகன உரிமையாளர்கள் பழுதான பாகங்களை மாற்ற ஊக்குவிக்கப்படுவார்கள்; இதன் மூலம் மொத்த சாலைப் பாதுகாப்பு மேம்படும் என அரசு நம்புகிறது.

உதிரி பாகங்களின் அதிக விலை, முக்கியமாக பல அடுக்கு வரி அமைப்பினால் ஏற்பட்டுள்ளது.

றக்குமதி செய்யப்படும் பொருட்களின் ஊஐகு மதிப்பின் அடிப்படையில் 5–10வீதமும் இறக்குமதி வரி, 18 வீதமும் மதிப்புக் கூட்டு வரி (ஏயுவு) மற்றும் பிற கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இதனால், இறுதியில் நுகர்வோர் செலுத்த வேண்டிய விலை கணிசமாக அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்