உள்ளூர்

திருகோணமலையில் பட்டாசு வெடித்து ஒருவர் பலி.

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (06) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

தேர் பவனியின் போது பட்டாசு வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்ற போது, அதில் ஒரு வானவேடிக்கை பட்டாசு வெடிக்கவில்லை.

இதனால், அருகில் இருந்த ஒருவர் அந்த பட்டாசை காலால் உதைத்துள்ளார்.

அது மற்றொருவர் மீது மோதி வெடித்துள்ளது.

இதனால் காயமடைந்த அவர், தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

இறந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை கந்தளாய் சட்டவைத்திய அதிகாரியால் நடத்தப்பட்டது.

சம்பவம் குறித்து தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்>ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்