உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்த, மைத்திரி, மற்றும் சஜித்தின் தயார் ஆகியோருக்கு காற்று புடுங்கப்படுகின்றது.

பாராளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (09) அறிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும்“Presidents’ Entitlements (Repeal) Bill” அரசியலமைப்பிற்கு முரணானதாக எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எனவே, இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அல்லது முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும்; வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வீடு, போக்குவரத்து வசதிகள், பிற சலுகைகள், மாதாந்திர கொடுப்பனவு, செயலாளர் கொடுப்பனவு மற்றும் விதவை மனைவிக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வூதியம் இனி வழங்கப்படாது.

நேற்று பாராளுமன்றத்தில் கூடிய நிர்வாகம், நீதி மற்றும் குடியுரிமைப் பாதுகாப்பு தொடர்பான துறைச் செயற்குழுவும் இந்த சட்டமூலத்தை அங்கீகரித்தது.
டாக்டர் நஜித் இந்திக தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த சட்டமூலம் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முன்னாள் மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டிருந்த சலுகைகளை நீக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பிற நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் அரசுத் தலைவர்களுக்கு, பதவியிலிருந்து விலகிய பின்னரும் சில உத்தியோகபூர்வ கடமைகள் அல்லது பொறுப்புகளை நிறைவேற்றுவதால், ஓய்வூதியங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன எனவும், ஆனால் இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தால் எந்த உத்தியோகபூர்வ பொறுப்பும் வழங்கப்படாத முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பரந்த அளவிலான சலுகைகளை மட்டுப்படுத்துவதாகவும் அதிகாரிகள் விளக்கினர்.

இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்