உள்ளூர் முக்கிய செய்திகள்

மின்சார சபையை மறுசீரமைக்க முனைந்தால் முழுமையான வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்படும்- தொழிற்சங்கம்

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது

தொழிற்சங்கங்களின் இடையறாத வேலைநிறுத்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் கூட இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது

இலங்கை நிதஹஸ் சேவக சங்கமயா (SLNSS) தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள சபையை நான்கு தனித்தனி அலகுகளாகப் பிரிக்கும் திட்டத்துக்கு எதிராக ‘விதிமுறைகளுக்குள் வேலை செய்வது’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தொழிற்சங்க தலைவர்கள், இந்த நடவடிக்கை தனியார்மயத்திற்கு வழிவகுக்கக் கூடும் என்றும், பணியாளர்களின் வேலை நிலைத்தன்மை ஆபத்தில் சிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.

ஆனால், அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் பேசியபோது, இத்தகைய அச்சங்கள் ஆதாரமற்றவை எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும், ‘இந்த மறுசீரமைப்பு தேசிய நலனை கருத்தில் கொண்டு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
சிலர் கூறுவது போல இது அரசியல் சுவாரஸ்யத்திற்காக அல்ல.
தற்போதைய நிலையில் சபை நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரமாக உள்ளது; அதனை நஸ்ட்டத்தில் விடமாட்டோம்’ என குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பணியாளர்களுக்கு நியாயமான அணுகுமுறை வழங்க அரசாங்கம் உறுதியாக இருப்பினும், மின்சார துறையின் திறன், நிதிநிலைத்தன்மை மற்றும் சேவைத்தரம் மேம்பட சீர்திருத்தங்கள் அவசியமானவையென தெரிவித்துள்ளார்.
‘தேவையானால் இழப்பீட்டு திட்டங்கள் ஏற்படுத்தப்படும். ஆனால் சிலரின் கோரிக்கைக்காக பொதுமக்கள் பலியாக்கப்பட முடியாது’ என அவர் கூறினார்.

மின்சார சபையை நவீனமயப்படுத்தி அதிகரித்து வரும் நிதிநட்டத்தை குறைப்பதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் எனவும், இது நீண்ட காலமாக தாமதமாகியிருப்பதாக எரிசக்தி துறை நிபுணர்கள் சிலர் பாராட்டியுள்ளனர்.

இதற்கிடையில், SLNSS பொதுச் செயலாளர் ப்ரபாத் பிரியந்த உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள், அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு பதில் அளிக்காவிட்டால், தற்போது நடைபெறும் போராட்டம் முழுமையான வேலைநிறுத்தமாக மாற்றப்படுமென எச்சரித்துள்ளனர்.
எனினும், குறுகியகால தொழிற்சங்க அழுத்தங்களுக்கு அடிபணியாமல், நாட்டின் நீண்டகால ஆற்றல் பாதுகாப்பு மற்றும் தேசிய நலனை முன்னிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மிகவும் முக்கியமாக, மின்சார சபையின் சக்திவாய்ந்த தொழிற்சங்கமாகக் கருதப்படும் Ceylon Electricity Board Engineers’ Union (CEBEU) இதுவரை SLNSS போராட்டத்தில் இணைய தீர்மானிக்காததால், அந்தப் போராட்டத்தின் வலிமை குறைந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்