உள்ளூர்

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு – உதவிப் பொலிஸ் பரிசோதகர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் என அறியப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ் பரிசோதகர் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்று வருபவர் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.

கெஹல்பத்தர பத்மே மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நான்கு குற்றவியல் கும்பல் உறுப்பினர்கள் அண்மையில் க‍iது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களிடம் சிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

அந்த விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்>முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியேறுகின்றார்

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்