முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் நீக்கும் சட்டத்தின் அடிப்படையில், ஏற்கனவே மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன தமது உத்தியோகபூர்வ இல்லங்களைவிட்டு வெளியேறியிருந்தனர். அதேபோல், சந்திரிக்காவும் விரைவில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேற உள்ளார்.

