ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

என்.பி.பி. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

ஆட்சியில் உள்ள அரசு, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் மசோதாவை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. 150 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, பொதுமக்கள் நலனுக்காக அதிகாரிகளின் சலுகைகளை ஒழிக்கும் அரசியல் சுத்திகரிப்பு நடவடிக்கையாகக் காட்டப்பட்டது. ஆனால் அரசியல் எப்போதும் எளிதானதாக இல்லை. எதிர்பார்த்த அரசியல் பலன்களைப் பெறாமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னுடைய அரசியல் உருவாக்க திறமையால் மீண்டும் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் ஆட்சி தரப்பு குழப்பத்தில் சிக்கியது.

அரசாங்கம் இதை தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றமாகக் கூறியபோதும், எதிர்க்கட்சிகள் உடனடியாக கேள்வி எழுப்பின. ‘உகாண்டாவில் மறைக்கப்பட்ட பில்லியன்களை மீட்கும் வாக்குறுதி என்ன ஆனது? எரிபொருள் மற்றும் மின்சார விலை குறைப்பு எங்கே? மக்களின் வாழ்வாதார செலவுகளைச் சுமுகப்படுத்தும் திட்டங்கள் எங்கே?’ என்று அவர்கள் சாடினர். இதனால் அரசின் நடவடிக்கை பழிவாங்கும் அரசியல் முயற்சியாகவே தோன்றியது.

அரசு வாதிப்பதாவது, 2024 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் ஒருவரின் விதவைக்கும் வழங்கப்பட்ட சலுகைகளுக்காக ரூ. 98.5 மில்லியன் செலவிடப்பட்டதாகும். ஒருவருக்கு மாதம் ரூ. 1.37 மில்லியன் அளவுக்கு நிதி செலவாகியிருந்தது. இச்சலுகைகளை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 100 மில்லியன் சேமிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இது ஒருவருக்கு ஆண்டுக்கு வெறும் ரூ. 5 மட்டுமே சேமிப்பாக அமைகிறது. அதேசமயம், 2025 முதல் பாதியில் அரசின் மொத்த செலவுகள் ரூ. 3,467 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. எனவே இந்த சேமிப்பு அற்பமானதாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் அதிகம் கவலைக்கிடமானது, எதிர்கால ஜனாதிபதிகள் ஓய்வு பெற்ற பின் எந்த சலுகையும் கிடைக்காது என்ற பயத்தால் அதிகாரத்தில் இருக்கும் போது கடினமான முடிவுகளை எடுக்க தயங்கக்கூடும் என்பது. குற்றச்சாட்டாளர்கள், போதைப்பொருள் கும்பல்கள் அல்லது ஊழல்மிக்க சக்திவாய்ந்த வட்டாரங்களை எதிர்கொள்ள ஜனாதிபதிகள் தயக்கம் காட்டக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. நேபாளத்தில் முன்னாள் தலைவர்கள் தாக்குதலுக்குள்ளான அனுபவம், இலங்கைக்கும் எச்சரிக்கை பாடமாகக் கருதப்படுகிறது.

1986 இல் ஜே.ஆர். ஜயவர்தனே இந்த ஓய்வு சலுகைகளை அறிமுகப்படுத்தினார். விமர்சகர்கள் அவர் தன்னுடைய நலனுக்காக இதை செய்ததாக குற்றஞ்சாட்டினாலும், ஜே.ஆர். தனது சொத்துக்களை முழுமையாக அரசுக்கு தானமாக வழங்கினார். அதேபோல ரணில் விக்கிரமசிங்கவும் தன்னுடைய சொத்துக்களை அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். எனவே இது தனிப்பட்டவர்களின் முடிவுகளைப் பொறுத்தது என வாதிடப்படுகிறது.

இம்மசோதாவின் தாக்கம் பெரும்பாலும் ராஜபக்ச சகோதரர்கள், சந்திரிகா குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனாவை நோக்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எதிர்க்கட்சிகள், ‘செலவுக் குறைப்பதே நோக்கம் என்றால் நிர்வாக ஜனாதிபதி பதவியையே ரத்து செய்ய முடியாதா?’ என்று கேள்வி எழுப்புகின்றன. அதேபோல், நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் தான் அரசுக்கு உண்மையான சுமை என்றும் அதனை நீக்கினால் பெரும் நிதி சேமிக்கலாம் என்றும் வலியுறுத்துகின்றன.

இந்நிலையில், மக்களின் கவனம் வேறு இடத்தில் உள்ளது. அவர்களின் மின்சார கட்டணம் குறையவில்லை, எரிவாயு சிலிண்டர் விலை குறையவில்லை, அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையவில்லை. எனவே முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பதே பொதுவான கருத்து.

நிதி அமைச்சகம் 2025 இல் 3.1மூ பொருளாதார வளர்ச்சி மட்டுமே கிடைக்கும் என்று கணித்துள்ளது. உலக வங்கி எச்சரிக்கையின்படி, இதே போக்கு தொடர்ந்தால் வறுமை நிலை 2034 வரை குறையாது. மத்திய வங்கி, 3–5மூ வளர்ச்சி சாத்தியமெனினும், அதற்காக வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா, சிறு மற்றும் நடுத்தர தொழில் ஆதரவு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது எந்தப் புதிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை; மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன் வரி சுமை தெற்காசியாவில் அதிகமுள்ளது.

அரசியல் நாடகங்களில் நேரத்தை விரயம் செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கி ஆண்டுக்கு ரூ. 100 மில்லியன் சேமித்ததாக பெருமை பேசுவதால் மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது மேடை அரசு முன் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்க்கிற உண்மையான விடுதலை மற்றும் நிவாரணத்தை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசிரியர் கருத்துக்கள்

வீடு கட்டிக் கொடுத்தால் வேட்பாளராகலாம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் வீடு மாவிட்டபுரத்தில் உள்ளது. மாவையின் பூர்வீக வீடு யுத்தத்தில் முற்றாக சிதைந்தது. யுத்தம் முடிந்த பின்னர் அந்த
கட்டுரை

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில் முனைப்பாக வெளிக்காட்ட முடியும் – கலாநிதி ஜெகான் பெரேரா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம்