உள்ளூர்

தியாகி திலீபன் கிழக்கிலிருந்து வடக்கிற்கு வருகிறார்

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு ஊர்திப் பயணம் இன்று திருக்கோவில் பகுதியில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையேற்றார்.
கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகனம் தனது பயணத்தை தொடங்கியது.

இந்த நினைவு ஊர்தி, திருக்கோவிலிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்று ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை, பாண்டிருப்பு உள்ளிட்ட அம்பாறை மாவட்ட தமிழர் பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளது.

பின்னர், ஊர்தி மட்டக்களப்பு மாவட்டத்தையும் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களையும் சென்றடைந்து, இறுதியாக தியாகி திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நிறைவு பெறவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்