உள்ளூர் முக்கிய செய்திகள்

கடவுச்சீட்டு வழங்கல் ஊடாக 5 பில்லியன் ரூபாவினை அரசு ஈட்டுகின்றது

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் மாதந்தோறும் பாஸ்போர்ட் வழங்கலில் ரூ.5 பில்லியன் வருமானம்

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் மாதந்தோறும் ரூ.3 பில்லியன் முதல் ரூ.5 பில்லியன் வரை கடவுச்சீட்டு; வழங்கலின் மூலம் வருமானம் ஈட்டுவதாக திணைக்களத்தின் துணை கட்டுப்பாட்டாளர் மற்றும் ஊடக பேச்சாளர் மகேஷ் கருணாதச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வழங்கிய விளக்கத்தில் அவர் கூறியதாவது: விண்ணப்பம் சமர்ப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு; பெற்றுக்கொள்ள முடியும்.
ஒருநாள் சேவையின் கீழ் தினசரி 1,500 முதல் 2,000 வரை பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

சாதாரண சேவையின் கீழ் சுமார் 1,000 பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. மொத்தத்தில் தினசரி 4,000 முதல் 5,000 வரை பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

ஒருநாள் சேவைக்கான கட்டணம் ரூ.20,000 என்றும், சாதாரண சேவைக்கான கட்டணம் ரூ.10,000 என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அடையாள அட்டைகள் அல்லது பிறப்புச் சான்றிதழ்களில் காணப்படும் பிழைகள் காரணமாக தாமதம் ஏற்படக்கூடும் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்கள் சரியாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மேலும், 16 வயதில் தேசிய அடையாள அட்டையை பெற்றவர்கள் காலப்போக்கில் உடலமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், பாஸ்போர்ட்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாக வழங்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்