உள்ளூர்

‘நான் மக்கள் தலைவர் என்ற பெருமையுடன், பணிவுடன் இருக்கிறேன்’: மகிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை மக்கள் வாழ்க்கையின் நடுவே கழித்ததாகவும், இன்று கூட அதே நிலை தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

தன் சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்ததாவது: ‘அதிகார காலங்கள் முடிந்தாலும், மக்கள் பாசம் அப்படி எல்லைகளைத் தாண்டி நிலைத்திருக்கும். அது மங்காது. அதிகாரத்தில் இருந்தாலும் இல்லையாவிட்டாலும், மக்கள் மகிந்த ராஜபக்சருடன் நின்றுள்ளனர்’ என்று கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மக்கள் சக்தியால் எழுந்து, இனமும் மதமும் எல்லைகளைக் கடந்த, மக்கள் தலைவர் ஆகியதற்கும், அயலவர் மற்றும் நெருங்கிய நண்பராக இருந்ததற்கும் பணிவுடன் பெருமை கொள்கிறார் என்று குறிப்பிட்டார்.

அவரது பதிவில் மேலும்: ‘நான் கார்ல்டன் ஹவுஸில் முதல்முறையாக வந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை, பாரம்பரிய மஹா சங்கத்திற்கு, ஆசீர்வாதம் வழங்கி வந்தவர்களுக்கு என் மரியாதையும் நன்றியையும் செலுத்துகிறேன்.
என் நலனைக் கேட்டறிந்துக் கொண்ட பிறகு வந்து சென்ற பிரியமான குடிமக்கள், அரசியல்வாதிகள்; மற்றும் பல்துறை நிபுணர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றும் கூறினார்.

நாட்டின் மக்களுடன் உண்மையான மனமார்ந்த தொடர்பு இல்லாத அரசியல்வாதி, உண்மையான மக்கள் தலைவர் ஆக முடியாது என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்