இந்தியா

இந்தியா அமெரிக்காவுடன் நடத்திய வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்.

இந்தியா அமெரிக்காவுடன் நேற்று (16-09) நடத்திய வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா விதித்த வரிகளுக்குப் பின் தமது அதிருப்தியினை குறைத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த பேச்சுவார்த்தைகளை ஊக்கமளிக்கும் வகையில் மாற்றியதாக தெரிகிறது

டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளனர்;
மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் மோடிக்கு ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போருக்கு முடிவு காண முனைந்தமைக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் இதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா சார்பில் பிரேண்டன் லிண்ச், தென் மற்றும் மத்திய ஆசியாக்கான உதவி வர்த்தக பிரதிநிதி, இந்திய வர்த்தக அதிகாரிகளான பிரதான பேச்சாளர் ராஜேஷ் அக்ரவால் தலைமையிலான குழுவை நியூடெல்லியில் சந்தித்தார்.

இந்திய வர்த்தக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ‘இருபுறமும் ஆரோக்கியமான முடிவை நோக்கி பயனுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் செய்ய முயற்சிகளை அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது’ என கூறப்பட்டுள்ளது.
விவரங்கள் இதற்கும் வெளியிடப்படவில்லை.

பேச்சுவார்த்தைகள் இரு நாட்டின் வர்த்தக உறவுகளை, அதில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றிய சாத்தியமான அம்சங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பக்கமும் அதிகாரப்பூர்வமான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என