உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாணசபை சபை தேர்தல் நடாத்த 2026 பட்ஜெட்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு கோரிக்கை

தாமதமாக நடைபெறும் மாகாண சபை தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2026) வரவுசெலவு திட்டத்தில் ரூ. 10 பில்லியன் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்த்னாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், தேர்தலுக்கான நிதி வருடாந்தம் கோரப்படுவதாகவும், தேர்தல்கள் நடைபெறும் வரை இந்த கோரிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.
‘தேர்தல் நடக்கவிருக்கும் பொழுது தேவையான நிதியை கோருகிறோம். கடந்த ஆண்டு (2024), மாகாணசபை தேர்தலுக்காக நிதி கோரப்பட்டதன் பிறகு தேர்தல்கள் நடக்காத காரணத்தால், இவ்வாண்டும் நிதி கோரப்பட்டுள்ளது,’ என்று அவர் குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, தேர்தல் ஆணையத்தின் கணக்கு பிரிவின்; தகவலின் படி, ரூ. 10 பில்லியன் ஒதுக்குமாறு கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

மாகாண சபை தேர்தல்கள் பல வருடங்களுக்கு தாமதமானதன் காரணம், 2015–2020 அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சட்டத் திருத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை எனக் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்