உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில வாள் வெட்டு தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வன்முறை கும்பல் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (16) இரவு, நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் புகுந்த கும்பல், அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு நடத்தி விட்டு தப்பிச் சென்றது.

இந்த தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்து இடத்திற்கு விரைந்த பொலிஸார்மீதும் தாக்குதலாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

தப்பிச் சென்ற மற்ற கும்பல் உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்