உள்ளூர் முக்கிய செய்திகள்

பொலிஸாரின் இடையூறுகளுக்கிடையிலும் திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின்; போராட்டம் நாளையும் தொடரும்.

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று இரண்டாவது நாளாகவும் பொலிஸாரின் இடையூறுகளுக்கு மத்தியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

‘விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு’, ‘இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிராக போராடுவோம்’ எனும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, நாளை (19-09) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதே இடத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும்.

போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற பொலிஸார் முயன்ற போதிலும், அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.
சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலங்களை மீள வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்