யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவர்களை இலக்காகக் கொண்டு நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்த இளைஞரின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
அதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 20 போதை மாத்திரைகள், 12 கிராம் 370 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 61 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கூரிய வாள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
பின்னர், குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

