உள்ளூர்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் மறைந்துள்ளாரா?

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர (மிதிகம லசா) படுகொலைக்கு தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பொலிஸாருடனான மோதலின் போது தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக எனும் இவர் மீது தேடுதல் வேட்டை அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் வலது மேல் கையில் “Anuradha” என்றும் இடது கையில் “Hitumade Jeevithe” என்றும் ஆங்கில பச்சைக் குத்து இருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதே வழக்கில் மூன்று பிரதான சந்தேகநபர்கள் இன்று (26) அதிகாலையில் அனுராதபுரம் பிரிவின் கெகிராவ பகுதியில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்த நான்கு நாட்களுக்குள் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

விசாரணை பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் காவல்துறை மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டதாகவும், குற்றப் புலனாய்வுத் துறை, நிதிக் குற்றப் பிரிவு, தென் மாகாண டிஐஜி அலுவலகம் மற்றும் எஸ்டிஎஃப் உள்ளிட்ட பல பிரிவுகள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தென் மாகாணத்திலிருந்து வடமத்திய மாகாணத்தில் கைவிடப்பட்ட வீட்டில் பதுங்கியிருந்தமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் தங்குமிடம் வழங்கிய மூன்றாவது நபர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது ஒருவர் பொலிஸாருடன் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் கைப்பற்றிய பொருட்களில் மோட்டார் சைக்கிள்கள், ரூ.12 இலட்சத்திற்கும் அதிகமான ரொக்கம், ஹெராயின், ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் உபகரணங்கள் அடங்கும்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியைச் சேர்ந்த லசந்த விக்ரமசேகர, ஒக்டோபர் 22 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் வெலிகம பிரதேச சபை அலுவலகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொதுமக்களாக நடித்து அலுவலகத்திற்குள் நுழைந்த குற்றவாளி, வெள்ளை சட்டை, கருப்பு முகமூடி, கருப்பு கண்ணாடி அணிந்திருந்ததாகவும், பிஸ்டல் துப்பாக்கியால் தலை, கழுத்து, மார்பு பகுதிகளில் மூன்று முதல் நான்கு ரவைகள் சுட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயமடைந்த விக்ரமசேகர மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கொலையுக்குப் பிறகு குற்றவாளி பிரதேச சபை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வந்து காத்திருந்த இரண்டாவது நபருடன் தப்பிச் சென்றார்.

கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகர வயது 38. அவர் மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்