உள்ளூர் முக்கிய செய்திகள்

நாட்டில் அரிசி பற்றாக்குறை இல்லையென்கிறது அரசு ஆனால் களநிலைவரம் வேறுப்பட்டுள்ளது

கொழும்பு மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் அரிசி பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எனினும், தற்போது நாட்டில் எந்தவிதமான அரிசி பற்றாக்குறையும் இல்லை என்று வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் துணை அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு செய்தியளிக்கையில், ‘நாட்டில் போதுமான அளவு அரிசி கையிருப்புகள் உள்ளன.

முன்னர் ‘கீரி சம்பா’ அரிசியில் தற்காலிக பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. ஆனால் புதிய கையிருப்புகள் சந்தைக்கு வந்துள்ளதால், அந்தப் பிரச்சினை இப்போது தீர்ந்துவிட்டது,’ என்றார்.

எனினும், கள நிலைவரப்படி, நிலைமை மாறுபட்டுள்ளது.
கடந்த வாரம் கொழும்பில் உள்ள முக்கிய சூப்பர் மார்க்கெட்களில் அரிசி கையிருப்புகள் குறைந்திருந்தன.

மேலும் பல சிறிய ரக கடைகளிலும்; ‘கீரி சம்பா’ அரிசியை வெளிப்படையாக விற்பனை செய்யாமல் மறைத்து வைத்திருந்தன.
இதனால் பொதுமக்களிடையே கவலை உருவானது.

இந்நிலையை சமாளிக்க அரசாங்கம் மொத்தம் 3,500 மெட்ரிக் டன் ‘பொன்னி சம்பா’ அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
முதல் தொகுதி அரிசி அக்டோபர் 23ஆம் தேதி வந்தது; மேலும் கடந்த இரண்டு நாட்களில் கூடுதல் கையிருப்புகளும் வந்தடைந்துள்ளன.

இதேவேளை, அமைச்சரவையும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் புசு-11 தரநிலைப் பொன்னி சம்பா அரிசியை தற்காலிகமாக இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளித்தது.

அத்துடன், இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப் பத்திரம் பெறும் கடமையிலிருந்தும் இறக்குமதியாளர்கள் விலக்கப்பட்டுள்ளனர்.

உணவு கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஒவ்வொரு இறக்குமதியாளருக்கும் அதிகபட்சம் 520 மெட்ரிக் டன் வரை அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தை நிலைமை விரைவில் சீராகும் என்றும், வரவிருக்கும் வாரங்களில் மக்களுக்கு தேவையான அரிசி போதுமான அளவில் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்