கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான நிலைய சுற்றிவளைப்பை தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஐந்து (05) ஆண் மற்றும் ஐந்து (05) பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள சுடலைக்குளம் பிரதேசத்தில், அதிகாரிகள் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்தபோது, அங்கு வந்த குழுவொன்று இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகளை பயன்படுத்தி அதிகாரிகளைத் தாக்கி சந்தேக நபரை விடுவித்து தப்பிச் சென்றது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த விஷேட அதிரடிப்படையின் இரண்டு அதிகாரிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
கைதுசெய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 16 முதல் 32 வயதுக்கு இடையிலுள்ளவர்களாகவும், பெண் சந்தேகநபர்கள் 26 முதல் 45 வயதுக்கு இடையிலுள்ளவர்களாகவும் உள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

