உள்ளூர்

கிளிநொச்சியில் விஷேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான நிலைய சுற்றிவளைப்பை தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஐந்து (05) ஆண் மற்றும் ஐந்து (05) பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள சுடலைக்குளம் பிரதேசத்தில், அதிகாரிகள் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்தபோது, அங்கு வந்த குழுவொன்று இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகளை பயன்படுத்தி அதிகாரிகளைத் தாக்கி சந்தேக நபரை விடுவித்து தப்பிச் சென்றது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த விஷேட அதிரடிப்படையின் இரண்டு அதிகாரிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

கைதுசெய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 16 முதல் 32 வயதுக்கு இடையிலுள்ளவர்களாகவும், பெண் சந்தேகநபர்கள் 26 முதல் 45 வயதுக்கு இடையிலுள்ளவர்களாகவும் உள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்