உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின் ரோந்து கப்பல்கள் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான மூன்று இயந்திரப் படகுகளை இடைமறித்தபோது நிகழ்ந்தது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளும் மீன்பிடி உபகரணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 31 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்,
மீதமுள்ள நான்கு பேர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஆரம்பக் கட்ட விசாரணைகள் நிறைவடைந்த பிறகு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வளத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்