உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் வழிப்பறி கொள்ளையன் உட்பட 6 பேர் கைது, தங்கசங்கிலிகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரைச் சேர்த்து, மொத்தம் ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு யாழ்ப்பாண நகரில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவத்துடன் நேரடி தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி மற்றும் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்