உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் பேசும் மக்களுக்கு முக்கிய வட்ஸ்அப் திருகுதாள அறிவித்தல்

WhatsApp மூலம் பணம் கோரும் மோசடி சம்பவங்கள் அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் இதுபோன்ற மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் பெருமளவில் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp குழுக்கள் வழியாக செயல்படும் மோசடி வலைகளுக்கு பலர் சிக்கி வருகின்றனர் என்பதையும், பொதுமக்கள் இத்தகைய குழுக்களில் செயல்படும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்கள் வழியாக பணம் அல்லது தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்பட்டால் அவை உண்மையானவை என நம்பி உடனடியாக பதிலளிக்காமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்