சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு (03-11) இரவு வன்முறைக் குழுவொன்று அட்டகாசம் செய்ததில், பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தகவல்கள் தெரிவிப்பதாவது, குறித்த குழுவினர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்துள்ளனர். இதனால் வண்டி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
மேலும், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டதுடன், உள்ளே இருந்த பொருட்களும் உடைத்து நொறுக்கப்பட்டன.
எனினும், விழிப்புணர்வுடன் செயல்பட்ட வீட்டார் உடனடியாக தீயை அணைத்ததன் மூலம் மேலும் பெரும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


