உள்ளூர்

வவுனியாவில் இளம் மனைவி கொலை கணவன் மாயம்.நடந்தது என்ன?

வவுனியா பூம்புகார் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மறைந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு வயது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று மாலை பணி முடித்து வீடு திரும்பிய தாயார், தனது மகள் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இ.சிந்துஜா என்ற இளம் தாயாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில், சிந்துஜாவின் கணவரும், இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸார் கூறுகையில், “மர்மமான இக்கொலை சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்