உள்ளூர்

போதைப்பொருட்களுடன் 6 சந்தேக நபர்கள் கைது!

போதைப்பொருட்களுடன் கூடிய குறித்த படகை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகப் பகுதிக்குக் கொண்டு வந்த பிறகு, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலேயே 6 சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 50 வயதுக்குட்பட்ட தெனினலங்கையை சேர்ந்தவர்கள் ஆகும்.

சந்தேக நபர்களிடம் இருந்து 42 கிலோ 334 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 77 கிலோ 484 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>யாழ்ப்பாணம் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றிரவு மீண்டும் ஆரம்பம்

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்