உள்ளூர்

இலங்கையின் போர் குற்றவாளிகளிற்கு தடை விதித்தமையால் திருப்தியடைவதாக பிரிட்டிஸ் பிரதமர் தெரிவிப்பு

இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன் என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்

அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில்யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றுதிரள்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்,அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குரியவர்களுடன் உடன்நிற்கின்றோம்.

சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதற்கு,கடந்தகால அட்டுழியங்களை ஏற்றுக்கொள்வதும், பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதை நான் அறிவேன்.

குற்றமிழைத்தவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டு;ம் என கடந்த வருடம் நான்; எழுதியிருந்தேன்.

இதன்காரணமாக இம்முறை இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக நாங்கள் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்க முடிந்தமை குறித்து திருப்தியடைகின்றேன்.

நீதி மற்றும் அமைதியை தொடர்ந்து பின்பற்றவேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகின்றது,

நீடித்த நல்லிணக்கம் மற்றும் ஸ்திரதன்மையை அடைவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கத்துடனும்,இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள சிவில் சமூகஅமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து நாங்கள் ஆக்கபூர்வமாக பணியாற்றிவருகின்றோம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்