உள்ளூர்

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் இலவசமாக முன்னிலையாவார் – தவிசாளர் உறுதி

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிரான வழக்கில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் சபையில் உறுதி அளித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (18-07) நடைபெற்றது.

இதில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன், தையிட்டி விகாரையை எதிர்க்கும் தீர்மானத்தை முன்வைத்தார்.

தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை, குறித்த வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவதை கோரிய பிரபாகரனின் கோரிக்கைக்கு பதிலளித்த தவிசாளர், அவர் இலவசமாகவே வழக்கில் முன்னிலையாவார் என்று உறுதி செய்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்