உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்தவர் கைது

திருச்சியில் இருந்து ஆந்திராவுக்கு காய்கறி பொருட்களை ஏற்றிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர், சரக்குகளை இறக்கிய பின் சொந்த ஊருக்கு திரும்பி, பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை நோக்கி பயணித்துள்ளார்.

அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் வாகனம் நின்றிருந்ததைக் கவனித்த பொலிஸார் விசாரணை நடத்த, உழவெசயனiஉவழசல தகவல்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தை சோதனையிட்ட போது, தக்காளி பெட்டிகளுக்குப் பின்னால் பதுக்கி வைக்கப்பட்ட 7 மூட்டைகளில் 240 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கஞ்சாவின் மதிப்பு இந்திய மதிப்பில் 50 இலட்ச ரூபாயாகவும், சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, கடத்தல் முயற்சி இலங்கைக்கே என்று தெரியவந்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்