உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லையில் இராணுத்தினரால் கொல்லப்பட்ட இளைஞரின் உடல் கொழும்புக்கு அனுப்பபடவுள்ளது

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (10-08) மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைக்கு பின், மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாத நிலையில், மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்பு அனுப்பப்பட உள்ளன.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், முல்லைத்தீவு–ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியைச் சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ். அவர் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போனதாக உறவினர்கள் புகார் செய்திருந்தனர்.

சடலம், நீதவானின் முன்னிலையில் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிஸார் ஆரம்ப விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அது உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனை முடிவில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, மேலதிக விசாரணைக்காக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பு அனுப்பப்பட்டுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்