கல்வி அமைச்சகம், தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத கல்விப் பட்டங்களை வைத்திருக்கும் நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் இணைக்கப்படமாட்டார்கள் என அறிவித்துள்ளது.
இதனை கல்வி மற்றும் உயர்கல்வி பிரதிஅமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அவருடைய தகவலின்படி, தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்விப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களுக்கு தேசிய தரங்களுக்கு இணங்கும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

