உள்ளூர்

வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழின் நகலை ஐ.தே.கட்சி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க நேற்று (22-08) கைது செய்யப்பட்ட நிலையில், 2023 செப்டம்பரில் இங்கிலாந்துக்குச் சென்றபோது அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

அந்த அழைப்பிதழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராப்டரினால் கையொப்பமிடப்பட்டு, விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகும்.
பட்டமளிப்பு விழா மற்றும் விருந்திற்கான இந்த அழைப்பிதழை கட்சி வெளியிட்டுள்ளது.

மேலும், அரச நிதி தவறாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விக்ரமசிங்க மறுத்திருப்பதையும், இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உண்மையற்றவை எனவும் ஐக்கிய தேசிய கட்சி மறுபடியும் வலியுறுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்