200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 20.9 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கிராண்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் போதைப்பொருளுடனான அவரது பயணப் பொதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தாய்லாந்தில் இருந்து நாட்டை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.
இதையும் படியுங்கள்>மருதானை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது.

