உள்ளூர்

5.94 கிலோகிராம் தங்க கட்டிகள் கடத்திய விமானநிலைய பணியாளர் கைது

இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் துறையின் பணியாளர், ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சுங்கத் துறையினரின் தகவலின்படி, 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புடைய 24 காரட் தங்க கட்டிகள், எடையில் 5.94 கிலோ, குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டன.

54 வயதான சந்தேகநபர், பணியாளர் வெளியேறும் வாயிலில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். தங்கக் கட்டிகள் அவரது காலுறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இவ்விடயத்தைச் சார்ந்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்