உள்ளூர்

மட்டக்களப்பில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை – உப்போடை பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் உட்பட இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உடல்; பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=195489

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்