இன்று பிற்பகல் திருகோணமலை கடற்கரை அருகே கடல்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகக் கணிக்கப்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் நில அதிர்வு கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் இன்று மாலை 4.06 மணியளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீற்றர் கடல்பகுதியில் பதிவாகியுள்ளது.
மேலும், மககனடரவ, ஹக்மன, பல்லேகலை மற்றும் புத்தங்கலா ஆகிய நான்கு நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களிலும் இந்த அதிர்வு பதிவானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) வெளியிட்ட அறிவிப்பில், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும், எந்தவித சுனாமி எச்சரிக்கையும் கடற்கரைக்கு வெளியிடப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

