உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் நீதி கோரி முழங்கிய மக்கள் – செம்மணி புதைகுழி உட்பட பல விவகாரங்களுக்கு கவனஈர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண நகரில் இன்று சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம் (PTA), பட்டலந்தை வதை முகாம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, மற்றும் பிற புதைகுழி விவகாரங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நீதியை வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, “அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு”, “செம்மணியில் மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து”, “அடக்குமுறைகள் இனி வேண்டாம்”, “பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு”, “அனைத்து இனங்களுக்கும் சம உரிமை வழங்கு” போன்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தினர்.

இந்த போராட்டத்தில் பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், வசந்த முதலிகே உள்ளிட்டோர், சிங்களரும் தமிழரும் இணைந்து பங்கேற்றனர்.

அவர்கள் ஒற்றுமையுடன் நீதி கோரி முழங்கிய காட்சி யாழ்ப்பாண நகரின் மக்கள் மனங்களில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்