உள்ளூர்

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா.

நல்லை ஆதீனத்துக்கு நேற்று(11)  காலை சென்ற டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.

 

 

அதனை தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 


யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

 

சமகால நிலைவரங்கள் தொடர்பாக பரஸ்பரம் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளர் கே.தயானந்தா மற்றும் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின், முன்னாள் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/share/p/1BQ8tzQy7y/

https://graphicsland.lk/?p=1540&preview=true

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்