உலகம் முக்கிய செய்திகள்

ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கிலிருந்து டொனால்ட் டிரம்ப் விடுவிப்பு!

ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.

2016 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்றம் நேற்று (10) தண்டனை விவரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி; தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் 10 நாள்களில் பதவியேற்க உள்ள நிலையில், ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது.

அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஒருவேளை சிறை செல்ல நேரிட்டால் அவரால் ஜனாதிபதியாக பதவியேற்க முடியுமா என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்தது.

டொனால்ட் டிரம்ப் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் இன்று பண மோசடி வழக்கில் நிபந்தனையின்றியும் அவருக்கு சிறைத்தண்டனை, அபராதம் எதுவுமின்றியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 130,000 டொலர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், நீதிபதி ஜுவான் எம்.மெர்ச்சன் சிறைத்தண்டனை, அபராதம் ஆகியவற்றைத் தவிர்த்து விடுவிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>தனஞ்சயவின் சகோதரர் மீது கொலைவெறித் தாக்குதல்!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்