உள்ளூர்

Clean Srilanka-56 பேர் போதைப் பொருட்களுடன் கைது!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனைகளில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

களுத்துறை வடக்கு மற்றும் பாணந்துறை – மோதரவில ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன். பாணத்துறை – மோதரவில பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், போதைப் பொருட்களுடன் 35 பேர் கைதாகியுள்ளனர்.

இதேவேளை, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் (11) வாத்துவ கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பணிகளை பாணந்துறை பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு புறக்கோட்டை நகரை சுத்தம் செய்யும் பணிகளைப் புறக்கோட்டை வர்த்தக சங்கத்தினரும் சமுதாய காவல்துறை பிரிவினரும் இணைந்து முன்னெடுத்தனர்.

இதையும் படியுங்கள்>COPE குழுவை புறக்கணிக்க எதிர்கட்சி தீர்மானம்!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்