அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாருடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முரண்பட்டதாக தெரியவருகின்றது
அர்ச்சுனா இன்று (21) பாராளுமன்ற அமர்வுக்காக கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசேட அதிதிகளுக்கான விளக்குகளை பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிறகும் வகையில் வாகனம் ஓட்டியதாகவும் அவரது வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியதையடுத்தே இந்த முரண்பாடு எழுந்துள்ளது
இதன்போது, ஆவணங்களை வழங்க மறுத்து, போக்குவரத்து கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.