முக்கிய செய்திகள்

போட்டி பரீட்சையின்றி வேலைவாய்ப்பை கோரியுள்ளனர் வடகிழக்கு பட்டதாரிகள் ஒன்றியம்

அநுரகுமார திசாநாயக்க வாக்குறுகளை அள்ளி வழங்கியதை போன்று காலம் தாழ்த்தாது உடனடியான வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு வடகிழக்கு பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் எம்.ஐ.எம். புர்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அசமந்தப் போக்கு காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

பொருளாதார நெருக்கடி, ஈஸ்டர் தாக்குதல், டெங்கு, கொரோனா என பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள பட்டதாரிகள் சுமார் 4, 5 வருடம் கற்றும் வேலையின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனர்

30 ஆயிரம் ஆசிரிய வெற்றிடங்களும் 3000 ற்கும் மேற்பட்ட கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதனை பட்டதாரிகளுக்கு பரீட்சை இன்றி பொது நியமனங்கள் ஊடாக அரச துறையில் நியமனங்களை வழங்க வேண்டும் என வடகிழக்கு பட்டதாரிகள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல