முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸவை 2 வாரத்துக்குள் கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது – மஹிந்தவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை இன்னும் இரு வாரங்களில் கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

ராஜபக்ஸ குடும்பத்தினரை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கும் வகையில் அரசியல் பழிவாங்கல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யோசித்த ராஜபக்ஸவை நிதி சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் அச்சட்டத்தின் பிரகாரம் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் பழிவாங்கல்களுக்கு முன்னுரிமை வழங்கியது போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது.

ஆகவே நல்லாட்சி அரசாங்கதினது நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல