உள்ளூர் முக்கிய செய்திகள்

குற்றச் செயல்களுக்கு துப்பாக்கி தீர்வாகாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு

சமூகத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திற்கு புறம்பான கொலைகள் ஒரு தீர்வாகாதுஎன தெரிவித்துள்ள ,லங்கை சட்டத்தரணிகள் சங்கம்,அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களைகட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது

2025பெப்ரவரி 19ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள் சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்தவேளை அவர் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் 21ம் திகதி இரவு ,ரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரின் காவலில் இருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டனர், பொலிஸாருடனான மோதல் ஒன்றின் போதே இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது,

அன்றிரவு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற கொலையுடன் அவர்களிற்கு தொடர்பிருந்ததாக குற்றம்சாட்;டப்பட்டது.

நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சம்பவங்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவலையை வெளியிடுகின்றது.

சட்ட அமுலாக்கல் அதிகாரிகளான பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும், இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் ,வ்வாறான என்கவுன்டர் கொலைகள் இடம்பெற்றுள்ளன உரியவிசாரணைகள் ,டம்பெறவில்லை என்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.

சமூகத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திற்கு புறம்பான் கொலைகள் ஒரு தீர்வாக அமையாது என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களை கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

பொலிஸாரினால் கொழும்பில் எவ்வாறு ,ருவர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்கவுன்டனர் கொலைகள் பொலிஸ்நிலையத்தில் கொலைகள் போன்ற பாரதூரமான சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலிஸ்நிலைய கொலைகள், என்கவுன்டர் கொலைகள் சமூகத்திலிருந்து முற்றாக அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த கலாச்சாரத்திற்கு காரணமான பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் இது அவசியமானது என குறிப்பிட்டு;ள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்