உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

நெடுந்தீவு பகுதியை சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்த போது , பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மதகுக்கு அருகில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.

அதில் காயமடைந்த இளைஞனை மீட்டு நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்