வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள், அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அவை எவ்வித பராமரிப்பின்றி காணப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இருக்கைகள் உடைந்து மற்றும் பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும், இருக்கைகளில் இருந்து விழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்தின் பிரதான நுழைவாயிலாகவும், பல மாவட்டங்களில் இருந்து வந்து செல்வோர் அதிகமாக கூடும் இடமாகவும் உள்ள வவுனியா பிரதான பேரூந்து நிலையத்தின் நிலை இவ்வாறு காணப்படுவதால் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.

