உள்ளூர்

தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு தான் எதிரானவன் அல்லவென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார்
பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள்.

தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை தான் எப்போதும் எதிர்த்து வந்துள்தாக ரணில் குறிப்பிட்டுள்ளார்

தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டானெ ஒருபோதும் தெரிவிக்கவில்லையென ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

அவ்வாறு தான் சொன்னதாலேயே தேர்தலில் தோல்வியுற்றதாக ரணில் கவலை வெளியிட்டுள்ளார்

விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக தன் மீது குற்றம்சாட்டினார்கள் என தெரிவித்த அவர் அது முடிவடைந்ததும் ராஜபக்சாக்களிற்கு ஆதரவளித்ததாக குற்றம்சாட்டியதாக குறிப்பிட்டுள்ளாhர்

நான் எவருக்கும் எதிரானவன் அல்ல மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளையின் செயற்பாடுகள் குறித்து விசாரணை இடம்பெற்றால் நாங்கள் தொடர்ந்தும் நீடிக்கலாம்.

நவிபிள்ளையுடன் செயற்படுவது சுலபமாகயிருந்தது அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார்.

அவர் எங்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளாhர்

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்