உள்ளூர்

மட்டக்களப்பில் மாடு திருடிய இளைஞனை மக்கள் அடித்தே கொன்றுள்ளனர்

அண்மையில் மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய இளைஞன் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து தாக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (25-03) அதிகாலை உயிரிழந்துள்ளார்

கடந்த 15ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புதுமண்டபத்தடி பிரதேசத்தில் மாட்டினை திருடியபோது இந்த இளைஞனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்கி, அந்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது.

அதையடுத்து, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரை சிறைச்சாலை நிர்வாகம் பொறுப்பேற்று, அவருக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, நேற்று அதிகாலை 1 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவர் பற்றி இதுவரை அறியப்படவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் பொலிஸார் கோரியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்