தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு 3 மாதத்தில் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்றார்.
கடந்த 29ஆம் தேதி சட்டசபையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்>இந்திய பிரதமரின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் 5 ஆம் திகதி; சூரிய மின்நிலையத் திட்டம் ஆரம்பிக்கப்படும்- ஜனாதிபதி அநுர

