உள்ளூர்

யாழ். பல்கலை 4ம் வருட சட்டத்துறை மாணவனுக்கு அடிபணிந்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நான்காம் வருட சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப் பெறப்பட்டு விசாரணைச் செயன்முறைகள் கைவிடப்பட்டமைக்கு பல்கலைக்கழக மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை சட்ட நியமனங்களுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு அந்த மாணவனின் தரப்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீளப்பெறப்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாக விசாரணைச் செயன்முறைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மாணவன் மீதான குற்றச்சாட்டுப் பற்றி பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட முதன்நிலை விசாரணையில் குறித்த மாணவன் தவறிழைத்ததாக உறுதிப்படுத்திய பின்னரும் அது பற்றிய முறையான விசாரணைகளிற்கு உத்தரவிடவேண்டிய பல்கலைக்கழக துணைவேந்தர் பேரவையின் அனுமதி பெறாமலேயே உயர்நீதிமன்ற வழக்கை நடாத்துவதற்கு பின்னடித்து தன்னிச்சையாக மேற்கொண்ட முடிவு பல்கலைக்கழக மட்டத்தில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அடுத்துவரும் பல்கலைக்கழக பேரவை கூட்டத்தில் குறித்த விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்