தமிழர் தாயக அரசியலுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஜனாதிபதி இறங்கியுள்ளதாக அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு
ஐ.நா. மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய அனுர குமார திசாநாயக்க அவர்கள் யாழ். அபிவிருத்திக் குழு கூட்டம் என வடக்குக்கு வந்து தமது […]

