உள்ளூர்

கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு!

  • January 3, 2025
  • 0 Comments

கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ரக வாகனம் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில்இ சம்பவத்தன்றே இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. தந்தை தாய் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்இ இன்றைய தினம் தாயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

உள்ளூர்

கிளிநொச்சியில் விபத்து குழந்தை பலி தாய் தந்தை படுகாயம்

  • December 25, 2024
  • 0 Comments

கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலியான அதே வேளை குழந்தையின் தாய் தந்தை மற்றும் சகோதரனும் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்த மூவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மது போதையில் ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி விப்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது விபத்து தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்  

இந்தியா

மத்திய பட்ஜெட் :பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

  • December 25, 2024
  • 0 Comments

இந்தியாவின் வரவு செலவு திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பாதீடு; அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பாதீட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பாதீடு தயாரிப்புக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் […]

உள்ளூர்

சட்டவாட்சி பலமடைந்தால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- சிறிநேசன் எம்.பி

  • December 25, 2024
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தப் போவதாகக் கூறியுள்ள நிலையில் அதனை நடைமுறைபடுத்தினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். சட்டவாட்சி பலமடைந்தால், பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்; ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்கக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார். […]

உள்ளூர்

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

  • December 23, 2024
  • 0 Comments

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பெசில் பெர்னாண்டோ எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இந்நாட்டில் சட்ட சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளை தினசரி விசாரணை […]

உள்ளூர்

நெற்பயிரை காப்பாற்றுமாறு விவசாயிகள் போராட்டம்

  • December 5, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரியே விவசாயிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்  

உள்ளூர்

ஜனாதிபதியின் சிம்மாசன உரை மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது – சிறீதரன் எம்.பி

  • December 4, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (3) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், 'ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. யுத்தம் காரணமாக வாங்கிய கடன்கள் காரணமாகவே நாடு […]

உள்ளூர்

தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

  • December 3, 2024
  • 0 Comments

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. […]

உள்ளூர்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

  • December 3, 2024
  • 0 Comments

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது. இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது. இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் […]

உள்ளூர்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று!

  • December 3, 2024
  • 0 Comments

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பாராளுமன்றம் […]